நீங்கள் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புகிறீர்களா?
கோபமோ அழுகையோ வந்துவிட்டால், 'என்னைக் கொஞ்ச நேரம் தனியா இருக்கவிடுங்க... ப்ளீஸ்’ என்று சிலர் சொல்லுவார்கள், கேட்டிருக்கிறீர்களா?
அது எப்படி? எவரும் இல்லாமல், தனிமையில் இருந்துவிட்டால், கோபம் எப்படிக் குறையும்? அழுகையை யார் கட்டுப்படுத்தி, ஆறுதல் வார்த்தை சொல்வார்கள்? - என யோசிக்கிறீர்கள்தானே?
உண்மையில், கோபத்தின்போதும் சரி... அழுகையின்போதும் சரி... அருகில் எவரேனும் நண்பர்களோ உறவினர்களோ இருந்துவிட்டால், அந்தக் கோபமும் அழுகையும் அவ்வளவு சீக்கிரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பாது. எதிரில் இருப்பவரிடம் பேசப்பேச, கோபம் இரட்டிப்பாகிக் கொண்டே இருக்கும். அழுது கொண்டே புலம்பும் வேளையில், எதிரில் இருப்பவரின் சமாதானமும் ஆறுதலும் இன்னுமான கழிவிரக்கத்தைக் கொடுக்க...
அழுகையில் இருந்து விடுபடுவது என்பது அத்தனை எளிது அல்ல!
யாராலும் தர முடியாத சில ஆறுதல்களை சில சமயம் தனிமை கொடுக்கும் .
நீங்கள் தினமும் வளை தளங்களை உபயோகிப்பவரா !
மன அமைதி தேவைபடுகிறதா!
உங்கள் மன அமைதி கொடுக்கும் தளங்களும் இங்கே உண்டு
கவலைகள் உங்களை சுற்றி இருந்தால் , சந்தோசமும் உங்களை சுற்றி தான் இருக்கும்.
கவலைகள் வருவது போல் , சந்தோசம் வருவது இல்லை
எப்போதும் மகிழ்ச்சியாகவும், மனநிறை வுடனும் இருங்கள். கவலைப்படுவதை விட்டொழியுங்கள்.
No comments:
Post a Comment